Friday, December 14, 2007

இதுவும் மோடி மஸ்தான் வேலைதான்

பார்ப்பனும் பறையனும் ஒன்றாக சேரணும்னு மனதில் தோன்றியதை எழுதியதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள். அதில் நிறைய பேர் பார்ப்பனும் இல்லை பறையனும் இல்லை. மற்ற சாதியை சேர்ந்த கூத்தாடிகள்தான்!ஊர் இரண்டாக இருக்கும்வரை இதுபோன்ற கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்தான்.

இதில் மோடி என்னும் கயவனையும் சேர்த்துக்கொள்கிறார்கள். மோடியையும் காஞ்சிபுர திருடன் சங்கிராச்சாரியையும் இந்துக்களின் முகமாக காட்டிவிட்டால் எதையும் சமாளிக்கலாம் என்பது இப்போதைய டிரண்டு. தாடி வைத்தவனையெல்லாம் பின் லேடனாக நினைக்கும் அமெரிக்க புத்தி இதுதான். எவனோ இரண்டு பேர் செய்வதால் கோடிக்கணக்கான ஆசாமிகள் பாதிக்கப்படுவது உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

என்னுடைய கருத்தை இங்கே பதிவது என்னுடைய உரிமை. எந்த விதமான விமர்சனமாக இருந்தாலும் வெளியிடுவேன். முடிந்தால் பொருத்தமான பதில் வாதத்துடன் வாருங்கள். வெட்டிக்கதைகள், உணர்வு சுரண்டல்கள் எல்லாம் இங்கே பலிக்காது.

Wednesday, December 05, 2007

பறையனும் பார்ப்பனும்

நம்மூரில் எப்போதும் சாதியை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால் அது பறையனும், பார்ப்பானுமாகத்தான் இருக்க முடியும். இந்த இரண்டு வர்க்கங்களுக்கு இடையேயான போராட்டத்தில் கூத்தாடிகள் போல நடுவில் புகுந்து நிறைய சலுகைகளை பெற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறியிருப்பது மற்ற சாதிக்காரர்கள்தான். பார்ப்பனும் பறையனும் சாதி எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கைகுலுக்கும்போது வெளிச்சம் வரும். உண்மை உலகுக்கு தெரியும்.