Tuesday, July 11, 2006

ஆரம்பிச்சுட்டாங்க! ஆரம்பிச்சுட்டாங்க! !

நான் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது, "இப்போது வேலுõர் கோட்டை, நாளை ஜார்ஜ் கோட்டை' என கூறியபடி, ஆட்சியில் என்னை மக்கள் அமர வைத்து விட்டனர். நன்றியுள்ளவர்கள் தமிழர்கள் என நினைக்க துõண்டிய விழா இது.

பெற்ற சுதந்திரத்தை ஜனநாயக முறைப்படி காப்பாற்ற வேண்டும். ஜனநாயகம் காப்பற்ற வேண்டும் என்பதால் தான் என்னை மீண்டும் மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

சரியான தலைமையில்லாததால் தான் சிப்பாய் புரட்சி தோல்வியடைந்தது என சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் இதுபோன்று புரட்சிகள் அதிகம் நடந்துள்ளது. ஆனால், துரோகிகள் இருப்பதால் தான் இதுபோன்ற புரட்சிகள் தோல்வியடைந்தன.

துரோகம் என்பது தமிழக சரித்திரத்தில் இன்று வரை நிரந்தர இடம் பிடித்துள்ளது. இதை அறிந்து தமிழகத்தை காப்பாற்றுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

வேலுõர் கோட்டையில் நடந்த முதல் சுதந்திர தாகமே இந்தியா முழுவதும் பரவி இந்திய சுதந்திரம் கிடைத்தது. புரட்சி நடந்த போது இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேய சிப்பாய்களின் குடும்ப பெண்களை மரியாதையாக நடத்தியுள்ளனர். இதில், இருந்து பண்பாடு காப்பதில் தமிழர்கள் சிறந்தவர்கள் என்பது தெரிகிறது.

காப்பாற்ற பட்ட சுதந்திரத்தை தற்போது நான் காப்பாற்றி வருகிறேன். இந்த சுதந்திரத்தை காப்பாற்ற இன்றைக்கும் அறப்போர் நடத்தி வருகிறேன்.

முதல்வர் கருணாநிதி.

0 Comments:

Post a Comment

<< Home